1.பட்டம். पतंग
பட்டம்.
நீண்ட நாட்களாக
கவிதை எழுதவில்லை.
நீண்ட நாட்களாக என்
மனம் வெற்றிடமாக இல்லை.
இறுதியில் குழந்தைப் பருவத்தின் ஒரு மாலை நேரம்
ஞாபகம் வந்தது .
பட்டங்கள் நிறைந்த
ஆகாயம்.
என்னுடைய கையில் மாவுக்கட்டு.
என் பட்டம் என் கட்டிலுக்கு கீழே
துடித்துக் கொண்டிருந்தது.
ஆகாயத்தில் பறந்து
கொண்டிருந்த
பல வண்ண பட்டங்கள்.
ஒரு அறுந்த பட்டம்
என்னை அழைத்துக் கொண்டிருந்தது.
நான் படுத்துக் கொண்டே புரண்டு படுத்தேன்.
இமைகளை மூடிக்கொண்டேன்.
No comments:
Post a Comment