அப்பா.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்
அப்பாவை
புத்தகங்கள் காகிதங்கள் நடுவில்
மூழ்கி இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
மணிக்கணக்கில்
எழுதிக்
கொண்டிருந்தார்.
அப்பா ஒரு கவிஞர் என்று தெரிந்து கொண்டேன்.
பால் வடிவ வழிப்போக்கன் நூலின் கவி நண்பர்
அவருடைய பழைய நாட்குறிப்பில் இருந்து சில பாடல்களை படித்தார்.
அந்த ஒரு கவிதையின்
ஆரம்ப வரிகள்
என் நினைவில் இருக்கின்றன.
நான் காதல் பாடல் பாடுகிறேன்.
ஆகையால் வாலிபம் என்னுடையது.
நான் துன்பத்திலும் புன் சிரிப்பு சிரிக்கிறேன்.
அதனால் ஓட்டம் என்னுடையது.
உண்மையில் அவர்
பாடலைப் படித்து தான்
என்னை கவிதைகள் எழுதத் தூண்டியது.
ஆனால் பிறகு
அப்பா வீடு கட்டுதல்,
குடும்பச் சுமைகள்
காரணமாக அவர் கவிதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டார்.
சில வெவ்வேறு எழுத்துப் பணிகள் செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தார்.
என் எழுதும் புகைப்பிடிப்பார்.
ஜர்தா பீடா போடுவார்.
அவர் வாழ் நாள் முழுவதும்
போராடினார்.
ஆனால் கொரானாவை எதிர்த்த போராட்டத்தில்
தோல்வி அடைந்தார்.
தன் உயிரைத் துறந்தார்.
நான் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்தேன்.
தந்தையின் இறுதிச்சடங்கில்
கலந்து ஷா கொள்ளாமல்
வருத்தமடைந்தேன்.
அவருடைய இறுதிப் பயணத்தில் கொரானா என்னை பங்கெடுக்கத் தடுத்தது.
அவர் வாழ்க்கையிலும் தனியாகப் போராடினார்.
மரணத்திலும் தனியாக போராடித் தோற்றார்.
எனது தம்பி தான் இறுதிச் சடங்கு செய்தான்.
அதுவும் இறுதிச்சடங்கு முகவர் மூலம்.
No comments:
Post a Comment